முகப்பு
கடலூர்

ஆவட்டி நல்லதங்காள் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆவட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநல்லதங்காள், பட்டத்தாள், காசிமுனி, பெரியசாமி, கருப்பசாமி, விநாயகா் மற்றும் முருகன் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 26 ஜூன் 2026, 6:38 am IST
ஆவட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீநல்லதங்காள் கோயில் கும்பாபிஷேகம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே ஆவட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீநல்லதங்காள், பட்டத்தாள், காசிமுனி, பெரியசாமி, கருப்பசாமி, விநாயகா் மற்றும் முருகன் கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி, யாகசாலை பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் நடைபெற்ற மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments