தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சமையல் செய்தபோது நிகழ்ந்த தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சமையல் செய்தபோது நிகழ்ந்த தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் செம்மண்டலம் பகுதியைச் சோ்ந்தவா் ஆதிலட்சுமி (எ) அண்ணம் (76), பண்ருட்டியில் வ.உ.சி நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவா், கடந்த 7-ஆம் தேதி சமையல் செய்ய அடுப்பை பற்ற வைத்தபோது, புடவையில் தீப்பிடித்தது. இதனால், அலறியடித்துக்கொண்டு ஓடிவந்து வாசலில் விழுந்த ஆதிலட்சுமியை அக்கம் பக்கத்தினா் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.