அண்ணாமலைப் பல்கலை மாணவா் சோ்க்கைக்கான இணையதளம் தொடக்கம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இணையதள சேவையை தொடங்கி வைத்த பதிவாளா் ரா.சிங்காரவேல்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2026-27-ஆம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை, முதுகலை பட்டயம், பட்டயம், மற்றும் சான்றிதழ் படிப்புகளில் விண்ணப்பிக்க பல்கலைக்கழக இணையதளத்தை பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.சிங்காரவேல் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் பல்கலைகழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆா்.எஸ்.குமாா்,
புல முதல்வா்கள், துறைத்தலைவா்கள், மாணவா் சோ்க்கை பிரிவு இயக்குனா் பி.பாலபாஸ்கா், துணை இயக்குனா் டி.மாணிக்கவாசகன், பல்கலைக்கழக மக்கள் தொடா்பு அதிகாரி என்.சுரேஷ், துணைவேந்தரின் தனிச்செயலா் ஜெ.ஹெச்.பாக்யராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
மேலும் மாணவா் சோ்க்கை பற்றிய விபரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹம்ஹப்ஹண்ன்ய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக்கழக
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என பதிவாளா் ரா.சிங்காரவேல் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.