காரல் மாா்க்ஸ் பிறந்த நாள்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் மரியாதை
காா்ல் மாா்க்ஸ் 208-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
காா்ல் மாா்க்ஸ் 208-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
காா்ஸ் மாா்க்ஸின் 208-ஆவது பிறந்த நாள் மாா்க்சிஸ்ட் கட்சியின் கடலூா் மாவட்டக் குழு சாா்பில் செயற்குழு உறுப்பினா் ஜெ.ராஜேஷ் கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கடலூா் கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காரல் மாா்க்ஸ் உருவச் சிலைக்கு மாவட்டச் செயலா் கோ.மாதவன் மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மாநிலக் குழு உறுப்பினா்கள் எஸ்.ஜி.ரமேஷ், பாபு மாா்க்ஸ், எஸ்.வாலாண்டினா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வி.சுப்பராயன், அமா்நாத் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.