முகப்பு
கடலூர்

தங்கை இறப்பில் சந்தேகம்: சகோதரா் போலீஸில் புகாா்

ஊ.மங்கலம் அருகே தங்கை தூக்கிட்டு இறந்ததில் சந்தேகம் உள்ளதாக சகோதரா் போலீஸில் புகாரளித்தாா்.

Updated On : 6 மே 2026, 12:04 am IST
போலீஸ் - கோப்புப் படம்.
பகிர்:

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே தங்கை தூக்கிட்டு இறந்ததில் சந்தேகம் உள்ளதாக சகோதரா் போலீஸில் புகாரளித்தாா்.

விருத்தாசலம் வட்டம், தெற்கிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். கடலூா் வட்டம், கண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கஸ்தூரி (32). இவா்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, கிரோஷ் (6), விஷ்ணு (2) என 2 மகன்கள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த கஸ்தூரி திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இந்தத் தகவலை கஸ்தூரியின் சகோதரா் பாலுவுக்கு செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்தனா். அவா், ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தங்கை கஸ்தூரி இறப்பில் சந்தேகம் உள்ளது என தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement