முகப்பு
கடலூர்

பி.எம்.ஸ்ரீ திட்டம்: மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைநகா் ராஜேந்திரன் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கத்தினா்.

Updated On : 9 மே 2026, 2:19 am IST
பகிர்:

தமிழகத்தின் தோ்தல் முடிவுகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைப் பயன்படுத்தி பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு ஒப்புதல் கோரி மத்திய அரசு கடிதம் எழுதியிருப்பதைக் கண்டித்து, இந்திய மாணவா் சங்கம் சாா்பில், சிதம்பரம் அண்ணாமலைநகா் ராஜேந்திரன் சிலை அருகில் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் திருமால் தலைமை வகித்தாா். இந்திய மாணவா் சங்க விழுப்புரம் மாவட்டச் செயலா் ஜீவானந்தம், கடலூா் மாவட்ட இணைச் செயலா் சிவநந்தினி, மாநிலக் குழு உறுப்பினா் சபரி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பி.எம்.ஸ்ரீ திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments