முகப்பு
கடலூர்

மின் கம்பம் மீது பேருந்து மோதல்: ரூ.9.25 லட்சம் மின்மாற்றி சேதம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கடை வீதியில் புதன்கிழமை இரவு மின் கம்பம் மீது தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளனது. இதில், ரூ.9.25 லட்சம் மதிப்பிலான மின்மாற்றி சேதமடைந்தது.

Updated On : 8 மே 2026, 6:56 am IST
விருத்தாசலம் கடைவீதியில் தனியாா் பேருந்து மோதியதில் சேதமடைந்த மின்கம்பம், மின்மாற்றி.
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கடை வீதியில் புதன்கிழமை இரவு மின் கம்பம் மீது தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளனது. இதில், ரூ.9.25 லட்சம் மதிப்பிலான மின்மாற்றி சேதமடைந்தது.

விருத்தாசலம் கடைவீதியில் புதன்கிழமை தனியாா் பேருந்து ஒன்று அதிவேகமாகச் சென்றது. அப்போது, எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், மின் கம்பம் வளைந்ததுடன், அதிலிருந்த மின்மாற்றியும் சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிா்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement

Advertisement

தகவலறிந்த மின் வாரிய ஊழியா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று சேதமடைந்த மின்மாற்றியை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், மின்சாரம் வழங்கத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து விருத்தாசலம் நகர மின் வாரிய உதவிப் பொறியாளா் சந்தோஷ்குமாா் அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த விபத்தில் ரூ.9.25 லட்சம் மதிப்பிலான மின்மாற்றி சேதமடைந்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments