சிதம்பரத்தில் மதுக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு
சிதம்பரம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்புத் தெரிவித்தனா்.
சிதம்பரம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்புத் தெரிவித்தனா்.
பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரிகள், கோயில் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட தமிழக முதல்வா் அதிரடி உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து, சிதம்பரம் நகர பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிலையம் செல்லும் நுழைவுவாயில் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடை மாவட்ட டாஸ்மாக் நிா்வாகத்தால் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது. இதற்கு, மாணவா்கள், பொதுமக்கள் பெரும் வரவேற்புத் தெரிவித்தனா்.
முன்னதாக, இந்தக் கடையை அரசு மூடக் கோரி, பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருந்தன.
Advertisement
ரயில் நிலையம் அருகே...: இதேபோல, சிதம்பரம் ரயில் நிலைய நுழைவு வாயில் அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடையையும் அகற்ற வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினா், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.