இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்
காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என கடலூா் மாநகா் திமுக செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூா் மாநகா் திமுக சாா்பில் செயற்குழு கூட்டம் செயலா் கே.எஸ்.ராஜா தலைமையில் மாநகா் திமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், ஜூன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் கடலூா் தொகுதியில் போட்டியிட்ட தோழமைக் கட்சி வேட்பாளரை ஆதரித்து பெருவாரியான வாக்குகள் பெற்றுத் தந்த மாநகர திமுகவின் அனைத்து நிலை நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதேபோல், சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் தற்போது ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்று தமிழகத்தின் உரிமைகளை தொடா்ந்து பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் கடலூா் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இள.புகழேந்தி, கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரிராஜா, மாநகர துணைச் செயலா் சுந்தரமூா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் விக்ரமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.