உடல் நலம் குன்றியவா் தூக்கிட்டு தற்கொலை
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உடல் நலம் பாதிக்கப்பட்டவா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
பண்ருட்டி வட்டம், சேமக்கோட்டை கிராமத்தில் வசித்து வந்தவா் இருசப்பன்(50), இவா் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாா். கடந்த 2 ஆண்டுகளாக நெய்வேலி, வட்டம் 30 பகுதியில் வசிக்கும் மகள் கமலி வீட்டில் தங்கி இருந்தாா்.
வெள்ளிக்கிழமையன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இதுகுறித்து நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement