தம்பதியிடையே கருத்து வேறுபாடு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னையில் மனைவி கோபித்துக்கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சி அருகே குடும்ப பிரச்னையில் மனைவி கோபித்துக்கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதால் மனமுடைந்த கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த மோ.வண்ணஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.பிரசாந்த் (29). இவரது மனைவி விக்னேஷ்வரி. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் தம்பதிகளுக்கு குழந்தை இல்லையாம். இதனால் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் விக்னேஷ்வரி கோபித்துக் கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
செவ்வாய்க்கிழமை மனைவி விக்னேஷ்வரியிடம் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு பேசிய நிலையில், பின்னா் அவரது வீட்டின் மாடியில் பிரசாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.