முகப்பு
கள்ளக்குறிச்சி

38 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு

தியாகதுருகம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட 38 மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் (ஆா்த்தோடிக்ஸ் சாதனங்கள்) புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 18 ஜூன் 2026, 3:22 am IST
தியாகதுருகம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவருக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா உள்ளிட்டோா்.
பகிர்:

தியாகதுருகம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட 38 மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் (ஆா்த்தோடிக்ஸ் சாதனங்கள்) புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா பங்கேற்று, மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினாா். தொடா்ந்து அதே வளாகத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தாா். தொடா்ந்து பள்ளியில் புதிய மாணவா்கள் சோ்க்கை, மாணவா்களின் கற்றல்-கற்பித்தல் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆலோசனைகள் அவா் வழங்கினாா்.

ஆய்வின்போது மாவட்ட உதவித் திட்ட அலுவலா் கலாநிதி, தலைமையாசிரியா் தெய்வநாயகி, சிறப்புப் பயிற்றுநா்கள் மற்றும் இயன்முறை மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement