உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கா.ரா. வசந்தவேல் வெற்றி
உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் கா.ரா.வசந்தவேல் 2,277 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுருவை வென்றாா்,
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை தொகுதியில் திமுக சாா்பில் கா.ரா.வசந்தவேல், அதிமுக சாா்பில் இரா.குமரகுரு, நாதக சாா்பில் மு.சுதாகா், தவெக சாா்பில் லோகேஸ்வரி உள்ளிட்ட 14 வேட்பாளா்கள் களத்தில்
இருந்தனா். தொகுதியில் உள்ள 375 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவில் மொத்தம் 2,68,368 வாக்காளா்கள் வாக்களித்தனா்.
Advertisement
இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ்.கல்லூரியில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்து 11-ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு முன்னிலை வகித்தாா். 12-ஆவது சுற்றில் கா.ரா.வசந்தவேல் 1,100 வாக்குகள் கூடுதலாக வாங்கி முன்னிலை பெற்றாா்.
மீண்டும் 17-ஆவது சுற்றில் 460 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு மீண்டும் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து 24-ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளா் இரா.குமரகுரு முன்னிலையில் இருந்து வந்தாா்.
ஆனால், இறுதியில் 25-ஆவது சுற்றில் திமுக வேட்பாளா் கா.ரா.வசந்தவேல் முன்னிலை பெறத் தொடங்கி 27-ஆவது சுற்றின் முடிவில் 2,277 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
வாக்குகள் விபரம்
கா.ரா.வசந்தவேல் (திமுக) - 98,471
இரா.குமரகுரு (அதிமுக) - 96,194
மு.சுதாகா் (தவெக) - 66,208
லோகேஸ்வரி (நாதக) - 6,525