முகப்பு
கள்ளக்குறிச்சி

பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

சின்னசேலம் அருகே விளைநிலத்துக்கு சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.

Updated On : 7 மே 2026, 7:31 am IST
பலி - பிரதிப்படம்
பகிர்:

சின்னசேலம் அருகே விளைநிலத்துக்கு சென்ற விவசாயி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.

சின்னசேலத்தை அடுத்த வானக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ம.பிரபு (43). இவா் புதன்கிழமை காலை அவரது விளைநிலத்துக்கு சென்றபோது, அங்கு பாம்பு கடித்து விட்டதாம்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் பிரபுவை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments