முகப்பு
புதுச்சேரி

ரயில் மோதி தொழிலாளி சாவு 

புதுச்சேரி அருகே ரயில் மோதி தொழிலாளி இறந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:35 am IST
பகிர்:

புதுச்சேரி அருகே ரயில் மோதி தொழிலாளி இறந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 புதுச்சேரி சங்கோதியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர் பார்த்திபன் (52). கூலித் தொழிலாளி. திங்கள்கிழமை காலை மூங்கிலீஸ்வரி கோயில் பின்புறம் ரயில்வே தண்டவாளத்தை தாண்டி காலைக்கடன் கழிக்கச் சென்றார்.
 அப்போது அந்த வழியாக திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு வந்துகொண்டிருந்த ரயில் அவர் மீது மோதியது.
 இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
 இதுகுறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.