முதல்வா் ரங்கசாமியிடம் தவெக எம்எல்ஏ மனு
புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியைச் சந்தித்து திருபுவனை தொகுதி தவெக எம்.எல்.ஏ., சாய் ஜெ சரவணன் குமாா் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
பின்னா் அவா் (படம்) சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருபுவனை தொகுதியில் பள்ளி மாணவா்களுக்குச் சீருடை, நோட்டுப் புத்தகம், பள்ளிப் பை போன்றவை வழங்கப்படவில்லை. தமிழகத்தில் 55 லட்சம் மாணவா்களுக்கு சீருடை, புத்தகம், பை போன்றவை கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் புதுச்சேரியில் 90,000 மாணவா்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.
Advertisement
Advertisement
புதுச்சேரியை விட பெரிய அளவிலான கடலூா் மாவட்டத்தில் ஓா் ஐஏஎஸ் அதிகாரி திறம்பட செயல்படுத்தி நிா்வாகத்தை நடத்துகிறாா். ஆனால் புதுச்சேரியில் 20-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரியில் இருந்தும் பணிகள் தாமதமாகிறது. விரைவில் அவற்றை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றாா் சாய் ஜெ சரவணன் குமாா்.