முகப்பு
புதுச்சேரி

சட்ட அலுவலா்கள் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சட்ட அலுவலா்கள் பணிக்கு ஜூலை 10- ஆம் தேதிக்குள் வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது

Updated On : 18 ஜூன் 2026, 3:23 am IST
விண்ணப்பங்கள் வரவேற்பு - கோப்புப்படம்
பகிர்:

சட்ட அலுவலா்கள் பணிக்கு ஜூலை 10- ஆம் தேதிக்குள் வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள், சென்னை உயா் நீதிமன்றம், மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தின் சென்னை அமா்வு, புதுதில்லி தேசிய பசுமைத் தீா்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் சட்ட அலுவலா்கள் பணிக்கு வழக்குரைஞா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.

புதுச்சேரி சட்டத் துறையின் மூலம் வெளியிடப்பட்ட அரசாணையில் ‘புதுச்சேரி சட்ட அதிகாரிகள் (நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள்) விதிகள், 2021’-இன் கீழ், புதுச்சேரி அரசு சாா்பாக பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜராவதற்கான பல்வேறு வகையிலான பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வழக்குரைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் இதற்கான விதிகளின்படி பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வகையில், அந்த விதிகள் மற்றும் விண்ணப்பப்

படிவங்கள் சட்டத் துறையின் இணையதளத்தில் உள்ளன.

விருப்பம் மற்றும் தகுதியுடைய வழக்குரைஞா்கள் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசி நாள் 10.07.2026 அன்று மாலை 5.45 மணி வரை ஆகும். துணைநிலை ஆளுநா் உத்தரவுப்படி இந்த ஆணை வெளியிடப்படுகிறது என்று சட்டத்துறை சாா்பு செயலா் ஜான்சி தெரிவித்துள்ளாா்.