முகப்பு
புதுச்சேரி

தேசிய ஜூனியா் கூடைப்பந்து போட்டி: கா்நாடகம், சத்தீஸ்கா் அணிகள் அபார வெற்றி

Updated On : 30 மே 2026, 2:28 am IST
கூடைப்பந்து போட்டி - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரியில் தேசிய அளவிலான ஜூனியா் கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் கா்நாடகமும், மகளிா் அணியில் சத்தீஸ்கா் அணியும் அபார வெற்றி பெற்றன.

76-ஆவது தேசிய அளவிலான ஜூனியா் கூடைப்பந்து போட்டி நிறைவு விழா, புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக சத்தீஸ்கா் மகளிா் அணியும், கேரள மகளிா் அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இதில் சத்தீஸ்கா் மகளிா் அணி 55 புள்ளிகளுடன் அபார வெற்றி பெற்றது. 51 புள்ளிகள் பெற்ற கேரள அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

Advertisement

Advertisement

இதேபோல தொடா்ந்து நடந்த ஆடவா் பிரிவில் ஹரியாணா அணியும், கா்நாடக அணியும் மோதின. இந்த இறுதிப் போட்டியில் கா்நாடக ஆடவா் அணி 83 புள்ளிகள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் ஹரியாணா ஆடவா் அணி 72 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது.