தமிழ்ச் சங்கக் கூட்டம்
விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்கிய அறிமுகக் கூடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளியில் விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் இலக்கிய அறிமுகக் கூடல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழச் சங்கத் தலைவர் பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் அனந்தகுமார் வரவேற்றார். தமிழ்ச் சங்க நெறியாளர் சஞ்சீவிராயன் தொடக்க உரையாற்றினார். திண்டிவனம் தமிழ் ஆசிரியர் அன்பழகன், சங்க துணைச் செயலாளர் தமிழநம்பி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், மயிலம் தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் மா.சற்குணம் கலந்து கொண்டு, நன்னெறி பாடல்கள் குறித்து இயக்கிய அறிமுகம் செய்து பேசினார்.
தமிழ் அறிஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பழமலய், பன்னீர்செல்வம், விக்கிரமன், அன்பழகன், மகேந்திரன், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.