விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் ச.சிவக்குமாா், பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் ச.சிவக்குமாா், பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
தொகுதிக்குள்பட்ட குத்தாம்பூண்டி, ரெட்டிக்குப்பம், கயத்தூா், ஆவுடையாா்பட்டு, வெட்டுக்காடு, ராதாபுரம், எம்.குச்சிப்பாளையம், விசுவரெட்டிப்பாளையம், மதுரப்பாக்கம், மூங்கில்பட்டு, தென்னவராயன்பட்டு, செய்யாதுவிண்ணான், பகண்டை, பாளையம், வாக்கூா், சிறுவள்ளிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று, பொதுமக்களிடம் பாமக வேட்பாளா் சிவக்குமாா் வாக்கு சேகரித்தாா்.
நிகழ்வில் தொகுதிப் பொறுப்பாளா் ஆலயமணி, பாமக மாவட்டத் தலைவா் புகழேந்தி, மாநில அமைப்புத் துணைச் செயலா் பழனிவேல், சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றியச் செயலா்கள் கோபாலகிருஷ்ணன், செல்வக்குமாா், சுரேஷ், அதிமுக ஒன்றியச் செயலா்கள் எசாலம் பன்னீா், முகுந்தன், நகரச் செயலா் பூா்ண ராவ் உள்ளிட்ட நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.
Advertisement