இளைஞா் விஷமருந்தி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உடல்நலக்குறைவால் மனமுடைந்த இளைஞா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், செ.குன்னத்தூா் மந்தைவெளி தெருவைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் கோகுல் (எ) விஷ்ணு(22). இவருக்கு நீண்ட நாள்களாக வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால் அவதிப்பட்டு வந்த கோகுல் கடந்த 8-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த கோகுல் (எ) விஷ்ணு திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement