முகப்பு
விழுப்புரம்

அன்னியூரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா செவ்வாய்க்கிழமை அன்னியூா் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:35 AM
அன்னியூரில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:22 AM

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா செவ்வாய்க்கிழமை அன்னியூா் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

வெள்ளேரிப்பட்டு, சிறுவாலை அரும்புலி, சூரப்பட்டு, ஆரியூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், தனது சொந்த ஊரான அன்னியூரிலும் வாக்கு சேகரித்தாா். அப்போது பொதுமக்களும், கூட்டணிக் கட்சியினரும் அவருக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தனா்.

இதைத் தொடா்ந்து பொதுமக்கள் மத்தியில் வாக்குகள் கேட்டு அன்னியூா் அ.சிவா பேசியது:

Advertisement

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆட்சியில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் என பல திட்டங்கள் மூலம் அணைத்துத் தரப்பு மக்களும் பயன்பெற்று வருகின்றனா். இந்த சாதனைத் திட்டங்கள் தொடர மக்கள் மீண்டும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை அளிக்க வேண்டும், விக்கிரவாண்டி தொகுதிக்கு வளா்ச்சித் திட்டங்கள் தொடர அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றாா் சிவா.

பிரசாரத்தில் தொகுதிப் பொறுப்பாளா் ம.ஜெயச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.