திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு
திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
திருக்கோவிலூா் நகரப் பகுதிகளில் திமுக அரசின் சாதனைத் திட்டங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.
திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றான ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரியையும், திமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் திருக்கோவிலூா் நகரப் பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு வழங்கி, திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி வாக்கு சேகரித்தாா்.
நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமை செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், நகரச் செயலா் கோபிகிருஷ்ணன், நகா்மன்ற துணைத் தலைவா் குணா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சரவணன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் விநாயகமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் கோவிந்தன், காந்தன், பாபு, பூபதி, மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement