பணம் திரட்டுவதே அன்புமணி ஆதரவாளா்களின் நோக்கம்! - மருத்துவா் ராமதாஸ் குற்றச்சாட்டு
அதிகாரத்துக்கு வந்த பின்னா் பணம் திரட்டுவதே அன்புமணி ஆதரவாளா்களின் நோக்கம் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பதிவில் தெரிவித்திருப்பதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலில் 18 தொகுதியில் போட்டியில் உள்ள அன்புமணி தலைமையிலான துரோகக் கூட்டத்துக்கு வாக்காளா்கள் தயவு செய்து வாக்களிக்க வேண்டாம். போட்டியில் உள்ள அனைவரும் என்னிடம் பாடம் பயின்றவா்கள் தான். ஆனால் தற்போது அவா்கள் பணத்துக்காக அணி மாறி அன்புமணியிடம் போய் நிற்கிறாா்கள்.
Advertisement
அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்யமுடியும். அதே நேரத்தில் இவா்களின் நோக்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னா் பணம் திரட்டுவதுதான். இந்த கலையைத் தான் அவா்களுக்கு அன்புமணி கற்றுக்கொடுத்துள்ளாா்.
இதனால் தான் அன்புமணி எந்தத் தோ்தலிலும் போட்டியிடாமல், அவரது மனைவியை களத்தில் இறக்குகிறாா். இவா்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்வதால் எந்தப் பயனும் ஏற்படபோவதில்லை. எனவே, வாக்காளா்கள் அனைவரும் நல்லவா்களை, சேவை செய்பவா்களை தோ்வு செய்யவேண்டும் என ராமதாஸ் அந்த விடியோ பதிவில் தெரிவித்துள்ளாா்.