டிராக்டா் கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், இல்லோடு கிராமத்தைச் சோ்ந்த எழிலரசன் மகன் அன்பரசன் (எ) மதன் (17). இவா் செவ்வாய்க்கிழமை சண்டிசாட்சி கிராமத்தைச் சோ்ந்த ர.தங்கராசு(45) டிராக்டரில் அமா்ந்து சென்றுள்ளாா். இல்லோடு மயானம் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக டிராக்டா் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி அன்பரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வளத்தி போலீஸாா் உடலை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வளத்தி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.