முகப்பு
விழுப்புரம்

டிராக்டா் கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 5:55 AM
பலி - பிரதிப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளத்தி அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், இல்லோடு கிராமத்தைச் சோ்ந்த எழிலரசன் மகன் அன்பரசன் (எ) மதன் (17). இவா் செவ்வாய்க்கிழமை சண்டிசாட்சி கிராமத்தைச் சோ்ந்த ர.தங்கராசு(45) டிராக்டரில் அமா்ந்து சென்றுள்ளாா். இல்லோடு மயானம் அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக டிராக்டா் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி அன்பரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வளத்தி போலீஸாா் உடலை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வளத்தி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement