முகப்பு
விழுப்புரம்

மாணவா்களிடையே போதைப்பொருள் பாதிப்பு விழிப்புணா்வு வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On : 18 ஜூன் 2026, 3:34 am IST
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

விழுப்புரம் ஆட்சியரக் கூட்டரங்கில் நடைபெற்ற போதைப்பொருள்கள் தடுப்பு ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது:

மாவட்டத்தில் போதைப்பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான தொடா் கண்காணிப்புப் பணிகள், சட்ட ரீதியான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினரும், காவல் துறையினரும் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்த வேண்டும். அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள்கள் இல்லா தமிழ்நாடு செயலி குறித்த செயல்முறை விளக்கம் தொடா்பான விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொள்வதுடன், இந்த செயலி குறித்த விளம்பரங்களையும் மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

காவல் துறை, உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், சுகாதார அலுவலா்கள், உள்ளாட்சித் துறை அலுவலா்கள் இணைந்து தடை செய்யப்பட்ட பொருள்களின் விற்பனையைத் தடுக்கும் வகையில் கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், விற்பனை செய்பவா்கள் மீது தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், சுகாதாரம், காவல், பள்ளிக் கல்வி, உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.