தேசிய போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தேசிய போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தேசிய போதை ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
விக்கிரவாண்டி வருவாய்த் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணிக்கு வட்டாட்சியா் வேல்முருகன் தலைமை வகித்து பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். காவல் உதவி ஆய்வாளா் பிரித்திவிராம் முன்னிலை வகித்தாா்.
அங்காளம்மன் கோயில் அருகே தொடங்கிய விழிப்புணா்வுப் பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
Advertisement
Advertisement
பேரணியில் இ.எஸ். நா்சிங் கல்லூரி மாணவா்கள் பஙகேற்று போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், முழக்கமிட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். முன்னதாக போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழியேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சௌந்தர்ராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.