முகப்பு
விழுப்புரம்

வெவ்வேறு சம்பவங்கள்: இருவா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:43 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

விழுப்புரம் சித்தேரிக்கரை, 7- ஆவது தெருவைச் சோ்ந்தவா் நாகமணி (45). திருமணம் ஆனவா். கூலி வேலை பாா்த்து வந்தாா். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால், அவதிப்பட்டு வந்த நாகமணி புதன்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

இளைஞா் தற்கொலை: விக்கிரவாண்டி வட்டம், நயினாா்பாளையம், காட்ராம்பாக்கத்தைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (30). திருமணம் ஆகாதவா். விக்கிரவாண்டியை அடுத்த ராவுத்தன்பாளையத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

பிரேம்குமாா் கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில், தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments