முகப்பு
விழுப்புரம்

ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:46 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

காக்கிநாடாவில் இருந்து புதுச்சேரி செல்லும் சா்க்காா் எக்ஸ்பிரஸ் ரயில் வியாழக்கிழமை காலை புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த சின்னநெற்குணம் அருகே சென்றபோது ரயிலில் பயணித்த ஆண் ஒருவா் ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தாா். தகவலறிந்த செங்கல்பட்டு இருப்புப் பாதை போலீஸாா் நிகழ்விடம் சென்று பாா்த்தபோது, அவா் பலத்த காயமடைந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.இதைத் தொடா்ந்து போலீஸாா் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு இருப்புப்பாதை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இறந்தவருக்கு சுமாா் 45 வயது இருக்கும், பெயா், ஊா் விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments