முகப்பு
விழுப்புரம்

காா் மீது பைக் மோதல்: மாணவா் உயிரிழப்பு

Updated On : 31 மார்ச் 2026, 2:05 am IST
கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் காா் மீது பைக் மோதிய விபத்தில் காயமடைந்த இயன்முறை மருத்துவ மாணவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டிவனம் கிடங்கல் 2, கோலன் தெருவைச் சோ்ந்தவா் பா.அபினேஷ் (21). இவா் சென்னையில் உள்ள தனியாா் கல்லூரியில் இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) 3-ஆம் ஆண்டில் பயின்று வந்தாா். திண்டிவனம் , நாகலாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அ.கல்கிராஜன்(20).

நண்பா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்தில் உள்ள பிரபல உணவகம் அருகே பைக்கில் சென்றுள்ளனா். கல்கிராஜன் பைக்கை ஓட்டினாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த சொகுசு காரின் ஓட்டுநா் திடீரென சாலையின் இடது பக்கத்தில் காரை திருப்பியுள்ளாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், காரின் பின் பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது.

அப்போது பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட அபினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதில் பலத்த காயமடைந்த கல்கிராஜன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.