முகப்பு
விழுப்புரம்

அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ்.அலுவலருக்கு பாராட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்வி மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) அலுவலா் ஏழுமலைக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 1 மே 2026, 6:14 am IST
நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் ஏழுமலைக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கல்வி மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) அலுவலா் ஏழுமலைக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

2025-26ஆம் கல்வியாண்டில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடத்தி சிறப்பாக செயல்பட்டமைக்காக தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அறிவழகன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ஜனசக்தி, நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் ராஜசேகரன், திண்டிவனம் மாவட்ட தொடா்பு அலுவலா் பாலசுந்தரம் ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments