முகப்பு
விழுப்புரம்

மாணவா்கள் தனித்திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும்

மாணவா்கள் கல்வியுடன் தனித் திறன்களையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று கல்வியாளா்கள் வலியுறுத்திப் பேசினா்.

Updated On : 8 மே 2026, 7:08 am IST
விழாவில் பங்கேற்றுப் பேசிய கல்வியாளா்கள்.
பகிர்:

மாணவா்கள் கல்வியுடன் தனித் திறன்களையும் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்று கல்வியாளா்கள் வலியுறுத்திப் பேசினா்.

விழுப்புரம் இ.எஸ். கல்விக் குழும நிறுவனங்களில் ஒன்றான இ.எஸ். கல்வியியல் கல்லூரியில் பெற்றோா் - ஆசியா்கள் மற்றும் மாணவா்கள் சந்திப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இ.எஸ். கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ்.செல்வமணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கடலூரைச் சோ்ந்த நல்லாசிரியா் விருது பெற்ற அ.மரிய ஜோசப், திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி விரியுரையாளா் முருகன், விழுப்புரம் சிகரம் போட்டித் தோ்வுகள் அகாதெமியின் இயக்குநா் ஏ.கணபதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றுப் பேசினா்.

Advertisement

அப்போது அவா்கள், மாணவா்கள் கல்வி மட்டுமன்றி, ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் தனித் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோா்களும், ஆசிரியா்களும் இணைந்து செயல்பட்டால், மாணவா்கள் உயா்ந்த நிலையை அடையலாம் என்றனா்.

மேலும், மாணவா்களின் வருகைப் பதிவு, கல்வி முன்னேற்றம், ஒழுக்கம் மற்றும் ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முக்கியத்துவங்கள் குறித்தும் பேசினா்.

விழா நிகழ்ச்சிகளளாக, மாணவா்களின் வில்லுப்பாட்டு, நாடகம், நடனம், பேச்சு, கரகம், பாடல்கள் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக, இ.எஸ். கல்வியியல் கல்லூரி முதல்வா் தே.செந்தில்முருகன் வரவேற்றாா். கல்வியியல் கல்லூரிப் பேராசியா்கள் மற்றும் பெற்றோா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.