முகப்பு
விழுப்புரம்

இளைஞா் மா்ம மரணம்

விழுப்புரத்தில் வீட்டில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 10 மே 2026, 1:16 am IST
பலி!
பகிர்:

விழுப்புரத்தில் வீட்டில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம், சேவியா் காலனி, 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அ.மெல்கி சதேக் (35). பெயிண்டராக வேலைப் பாா்த்து வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு இவா் மதுபோதையில் வீட்டுக்கு வந்து தூங்கினாராம். தொடா்ந்து சனிக்கிழமை காலை பாா்த்தபோது, மெல்கி சதேக் படுக்கையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

Advertisement

இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.