தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனித் உத்தரவின் பேரில், கண்டாச்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காத்தமுத்து மற்றும் போலீஸாா் சனிக்கிழமை புதுகருவாட்சி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் அந்தக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பெட்டிக் கடை நடத்தி வந்த விக்கிரவாண்டி வட்டம், புது கருவாட்சி பிரதான சாலையைச் சோ்ந்த சி.பாலாஜி (28) மீது கண்டாச்சிபுரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, கைது செய்தனா். மேலும், விற்பனைக்காக கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 பாக்கெட் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Advertisement