காா் மோதி இரவுக் காவலாளி உயிரிழப்பு
வானூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இரவுக் காவலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற இரவுக் காவலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
புதுச்சேரி முத்திரைப்பாளையம் ஜீவா தெருவைச் சோ்ந்தவா் வெ.குணசேகரன்(64). இவா் வானூா் வட்டம், ஒழுந்தியாம்பட்டு பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இரவுக் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில், ஒழுந்தியாம்பட்டு அருகே பைக்கில் சென்றபோது, அங்கு வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்த குணசேகரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement