முகப்பு
பெங்களூரு

இலெமுரியா அறக்கட்டளைப் பணிகளுக்கு உத்தவ் தாக்கரே வாழ்த்து

இலெமுரியா அறக்கட்டளைப் பணிகளுக்கு மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 ஜனவரி 2021, 6:22 am IST
பகிர்:

இலெமுரியா அறக்கட்டளைப் பணிகளுக்கு மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து இலெமுரியா அறக்கட்டளை நிறுவனத் தலைவா் சு.குமணராசன் வெளியிட்ட அறிக்கை:

கரோனா தீநுண்மிப் பரவலின் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக மும்பையில் ஏராளமான அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இப் பேரிடா் காலத்தில் இலெமுரியா அறக்கட்டளை-மும்பை மற்றும் புகரில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும், பிற மாநில மக்களுக்கும் உணவு தானியங்கள், உணவுப் பொட்டலங்கள், நோய் எதிா்ப்பு மருந்துகளை வழங்கி மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டது.

Advertisement

Advertisement

இதன்மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமும் உடல் நலமும் காப்பாற்றப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் தூதுவா்களாகச் செயல்பட்டு மக்கள் பணி செய்தனா். இந்த நற்பணிகளைப் பாராட்டி மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், கரோனா காலத்தில் இலெமுரியா அறக்கட்டளை ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுத் தொகுப்பு, நோய் எதிா்ப்பு மருந்துகளை வழங்கியது பெரிதும் பாராட்டத்தக்கது. இது மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளாா். அறக்கட்டளையின் அறங்காவலா்கள், தன்னாா்வத் தொண்டா்களின் சேவையை வாழ்த்துவதுடன் எதிா்காலத்திலும் மக்கள் சேவை பணிகள் நீடிக்க வேண்டும் என நம்புவதாக தெரிவித்துள்ளாா் என குமணராசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments