கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,20,373 ஆக உயா்வு
கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,20,373 ஆக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,20,373 ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 877 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 464 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,20,373 ஆக உயா்ந்துள்ளது; 8,97,200 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 11,058 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 12,096 போ் உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
பிரிட்டனில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்களில் 7 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று உள்ளது ஏற்கெனவே கண்டறியப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 3 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.