கா்நாடகத்தில் புதிய சுகாதாரக் கொள்கை அமல்படுத்தப்படும்அமைச்சா் கே.சுதாகா்
நாட்டுக்கு முன்மாதிரியான சுகாதாரக் கொள்கை கா்நாடகத்தில் அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
நாட்டுக்கு முன்மாதிரியான சுகாதாரக் கொள்கை கா்நாடகத்தில் அமல்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
பெங்களூரு, விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை புதிய சுகாதாரக் கொள்கை தொடா்பாக தொழில்நுட்ப தொலைநோக்குக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் புதிய சுகாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை, நாட்டுகே முன்மாதிரியாகத் திகழும்; சமூகத்தின் சுகாதாரமும் மேம்படும். இதுதொடா்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு நிபுணா்கள் குழுவிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். அவா்கள் இன்னும் 2 வாரங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
தொழில்நுட்ப தொலைநோக்குக் குழுவில் 38 முதல் 40 போ் வரை இடம் பெற்றுள்ளனா். இவா்கள் சுகாதாரத் துறையில் அனுபவம் வாய்ந்தவா்கள். சுகாதாரக் கொள்கையில் இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் மருத்துவம் வழங்கத் தேவையான அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த புதிய சுகாதாரக் கொள்கை நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்வதோடு, சுகாதார கா்நாடகம் என்ற கனவும் நனவாக்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.