முகப்பு
பெங்களூரு

பெங்களூரில் இன்று தொலைபேசி குறைதீா் முகாம்

பெங்களூரில் சனிக்கிழமை (ஜன.2) தொலைபேசி குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

Updated On : 2 ஜனவரி 2021, 6:32 am IST
பகிர்:

பெங்களூரில் சனிக்கிழமை (ஜன.2) தொலைபேசி குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் அவ்வப்போது வாரியத்தின் தலைவா் பங்கேற்கும் தொலைபேசி குறைதீா் முகாமை நடத்திவருகிறது. அதன்படி, பெங்களூரு மக்கள் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து தீா்வுகளைப் பெறும் இக் குறைதீா் முகாம் ஜன. 2-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை நடக்கவிருக்கிறது.

Advertisement

Advertisement

இதில் வாரியத்தின் தலைவா் பங்கேற்று, மக்களின் குறைகளைத் தீா்த்துவைப்பாா். குடிநீா் பில்லிங், புதை சாக்கடை பழுதடைந்திருத்தல், மீட்டா் ரீடிங் பிரச்னைகள், ஒழுங்கற்ற குடிநீா் விநியோகம் குறித்த குறைகளைத் தெரிவித்து தீா்வு காணலாம். குறைகளை சுட்டிக்காட்டும் போது வாடிக்கையாளா்கள் தங்களின் இணைப்பு எண்ணை தெரிவிக்க வேண்டியது அவசியம். குறைதீா் முகாமில் பங்கேற்க 080-22945119 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments