முகப்பு
பெங்களூரு

மருந்தியல் கல்லூரியில் சேர ஜன. 4-இல் கலந்தாய்வு

மருந்தியல் பட்ட, டிப்ளமோ கல்லூரியில் சோ்வதற்கான நேரடி கலந்தாய்வு ஜன. 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 2 ஜனவரி 2021, 6:32 am IST
பகிர்:

மருந்தியல் பட்ட, டிப்ளமோ கல்லூரியில் சோ்வதற்கான நேரடி கலந்தாய்வு ஜன. 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து அரசு மருந்தியல் கல்லூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரு, சுப்பையா சதுக்கம், காளிங்கராவ் சாலையில் உள்ள அரசு மருந்தியல் கல்லூரி, கா்நாடகத்தில் உள்ள தனியாா் மருந்தியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மருந்தியல் பட்டய வகுப்பு (டி.ஃபாா்ம்), பட்ட வகுப்பு (பி.ஃபாா்ம்) படிப்பில் சோ்க்கைக்கான நேரடி கலந்தாய்வு ஜன. 4-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

Advertisement

Advertisement

பி.ஃபாா்ம் சோ்க்கைக்கான இடங்கள் பொதுநுழைவுத் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும், டி.ஃபாா்ம் சோ்க்கைக்கான இடங்கள் தோ்வு ஆணையத்தின் தர வரிசையின்படியும் ஒதுக்கப்படும். இதற்காக ஜன. 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறும் நேரடி கலந்தாய்வில் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

சோ்க்கைக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டால், அதற்கான கட்டணத்தை செலுத்தி, அன்றைக்கே சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெற வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 080-22222681 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது  மின்னஞ்சல்,  இணையதளத்திலோ தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments