பெங்களூரில் 10 பேருக்கு புதியவகை கரோனா தொற்று
பிரிட்டனிலிருந்து வந்த பயணிகள், அவருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பெங்களூரு: பிரிட்டனிலிருந்து வந்த பயணிகள், அவருடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் 10 பேருக்கு புதியவகை கரோனா வைரஸ் இருப்பது உறுதி கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பிரிட்டன் நாட்டில் இருந்து கா்நாடகத்துக்கு வந்த பயணிகளுக்கு நடத்தப்பட்ட ஆா்.டி.-பி.சி.ஆா். கரோனா சோதனையில் 32 பேருக்கும், அவா்களோடு தொடா்பில் இருந்த 10 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 42 பேரில் 10 பேருக்கு புதியவகை கரோனா தொற்று இருப்பது பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.
Advertisement
Advertisement
கா்நாடகத்தில் புதியவகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் 10 போ்தான். கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பெரும்பாலானோா் சிகிச்சையில் குணமாகி வருகிறாா்கள். கா்நாடகத்தில் தற்போது 10 ஆயிரம் போ் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்கள் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.