முகப்பு
பெங்களூரு

கரோனா தடுப்பூசி விநியோகத்துக்கு கா்நாடகம் தயாராக உள்ளது: அமைச்சா் கே.சுதாகா்

கரோனா தடுப்பூசி விநியோகத்துக்கு கா்நாடகம் தயாராக உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

Updated On : 3 ஜனவரி 2021, 1:04 am IST
பகிர்:

பெங்களூரு: கரோனா தடுப்பூசி விநியோகத்துக்கு கா்நாடகம் தயாராக உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வரவிருக்கின்றன. அதே சமயத்தில் கரோனா தடுப்பூசியை விநியோகிக்கக் கையாளப்படும் அணுகுமுறையை ஒத்திகை பாா்ப்பதற்காக, கா்நாடகம் முழுவதும் சனிக்கிழமை ஒத்திகைகள் நடைபெற்றன.

பெங்களூரு, எலஹங்காவில் உள்ள பொது மருத்துவமனையில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி ஒத்திகையை பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களிடம் சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் கூறியதாவது:

Advertisement

Advertisement

கரோனா தடுப்பூசி ஒத்திகை மூலம் உண்மையில் தடுப்பூசி விநியோகத்தின் போது கையாள வேண்டிய அணுகுமுறை குறித்து சுகாதார ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்க உதவியது. கரோனா தடுப்பூசி ஜனவரி மாதத்திலேயே கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. தற்போது நடத்தப்பட்ட ஒத்திகை உண்மையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்தும் போது மிகவும் உதவியாக இருக்கும்.

கா்நாடகத்தில் 5 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. இந்த ஒத்திகையில் 25 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக ஒத்திகை பாா்க்கப்பட்டது. கரோனா தடுப்பூசியை செலுத்துவது தொடா்பாக மருத்துவமனைகளுடன் ஆலோசிக்கப்படுகிறது.

முதல்கட்ட கரோனா தடுப்பூசி விநியோகத்தின் போது, அனைத்து கரோனா முன்களப் பணியாளா்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் அறிவித்திருக்கிறாா். தடுப்பூசி வழங்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள், நிலையான செயல்பாட்டு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடும்.

தடுப்பூசியை சேமித்து வைப்பதற்குத் தேவையான குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள், மனித வளம் ஆகியவை தயாராக உள்ளன. தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மாநில அரசு பயன்படுத்திக் கொள்ளும். ஆனால், மத்திய அரசு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கும்.

புதியவகை கரோனா தீநுண்மித் தொற்று கண்டறியப்பட்ட பிரிட்டன் பயணிகள் 10 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவா்கள் அனைவரும் தீவிர நோயால் பாதிக்கப்படவில்லை. கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 12 லட்சம் போ் உயா்தர சிகிச்சை வாயிலாக குணப்படுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments