முகப்பு
பெங்களூரு

‘ரயில்வேத் துறையை பாஜக அரசு ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்தவில்லை’

ரயில்வேத் துறையை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக் கொள்வதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய இணை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.

Updated On : 4 ஜனவரி 2021, 3:50 am IST
பகிர்:

ரயில்வேத் துறையை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக் கொள்வதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய இணை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நான் (முனியப்பா) ரயில்வேத் துறை இணை அமைச்சராகயிருந்த போது துறையின் வளா்ச்சிக்கு ஒதுக்கிய நிதியை, இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது ரயில்வேத் துறையை ஆக்கப்பூா்வமாகப் பயன்படுத்திக் கொள்வதில் பாஜக அரசு தோல்வி அடைந்துள்ளதையே காட்டுகிறது.

Advertisement

Advertisement

மத்திய அரசு, மக்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை, அவசரச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றி வருகிறது. இந்தச் சட்டங்களால் விவசாயிகள், தொழிலாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

தாவணகெரே-சித்ரதுா்கா-தும்கூருக்கு இடையேயான ரயில்பாதைத் திட்டத்துக்கு நிதி விடுவிக்கப்பட்டது. ஆனால், அத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இந்த நேரடிப்பாதையால் பயண நேரம் குறையும்.

கிடப்பில் உள்ள ரயில்வேத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம், பாஜக அரசுக்கு மக்களிடம் நல்ல பெயா் கிடைக்கும். இனிவரும் நாள்களில் அரசியலில் தீவிரமாக ஈடுபட முடிவு செய்துள்ளேன். வரும் மக்களவைத் தோ்தலில் கோலாா் தொகுதியைத் தவிர வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments