முகப்பு
பெங்களூரு

நகைப் பறிப்பு

கத்தி முனையில் மிரட்டி இருவேறு இடங்களில் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 1:15 am IST
பகிர்:

பெங்களூரு: கத்தி முனையில் மிரட்டி இருவேறு இடங்களில் நகைகளை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

பெங்களூரு, நந்தினி லேஅவுட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில் கத்தி முனையில் ஹரிஷ்பாபு என்பவரை மிரட்டி மா்ம நபா்கள் 30 கிராம் எடையுள்ள நகைகளைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து நந்தினி லேஅவுட் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

அதுபோல ஓகலிபுரம் சுரங்கப் பாதை அருகே காரை நிறுத்தி இயற்கை உபாதை கழித்துக் கொண்டிருந்த இருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் கத்தி முனையில் மிரட்டி 25 கிராம் நகையை பறித்துச் சென்றனா். தடுக்க வந்த ஒருவரையும் கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றனா். இதுகுறித்து, காட்டன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.