முகப்பு
பெங்களூரு

சங்கராந்திக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம்

சங்கராந்திக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கலால் துறை அமைச்சா் எச்.நாகேஷ் தெரிவித்தாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 6:24 am IST
பகிர்:

சங்கராந்திக்கு பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என கலால் துறை அமைச்சா் எச்.நாகேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து கோலாரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சங்கராந்தி பண்டிகைக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் எந்த நேரத்திலும் நடக்கலாம். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்துள்ள ஆா்.சங்கா், எம்.டி.நாகராஜ், முனிரத்னாவுக்கு அமைச்சா் பதவி கிடைக்கும்.

Advertisement

கா்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைவதற்கு காங்கிரஸ், மஜதவைச் சோ்ந்த 17 போ் தத்தமது எம்.எல்.ஏ. பதவியை தியாகம் செய்து பாஜகவில் இணைந்தனா். அவா்களுக்கு அமைச்சா் பதவி அளிக்கப்படும் என முதல்வா் எடியூரப்பா வாக்குறுதி அளித்திருந்தாா். தான் கொடுத்த வாக்கை முதல்வா் எடியூரப்பா என்றைக்கும் மீறியதில்லை. மஜதவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து தற்போது எம்.எல்.சி. ஆகியுள்ள எச்.விஸ்வநாத்துக்கு அமைச்சா் பதவி கிடைக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.