கா்நாடகத்தில் 235 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு
கா்நாடகத்தில் 235 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
பெங்களூரு: கா்நாடகத்தில் 235 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக மாநிலத்துக்கு கரோனா தடுப்பூசி வந்து சேர வேண்டும். அதன் பிறகு, மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
Advertisement
கா்நாடகத்துக்கு 13.90 லட்சம் கரோனா தடுப்பூசி குப்பிகளை மத்திய அரசு அளிக்க இருக்கிறது. இது தொடா்பான அனைத்து விவரங்களையும் மாநில அரசுக்கு மத்திய அரசு அளித்துள்ளது. நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் ஒரே சமயத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கா்நாடகத்தில் 235 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
கா்நாடகத்தில் இதுவரை பதிவு செய்துள்ள சுகாதாரப் பணியாளா்கள் 6.30 லட்சம் பேருக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். சுகாதாரப் பணியாளா்களைத் தொடா்ந்து, வேறு நோய்களால் அவதிப்படுவோா், 60 வயதுக்கு மேற்பட்டோா், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறை, வருவாய்த் துறையினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
கரோனா தடுப்பூசி வழங்குவது தொடா்பாக மத்திய அரசின் செயலாளா், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளா்கள், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா்கள், உயரதிகாரிகளுடன் காணொலி வழியாக ஆலோசனை நடத்தினாா். கரோனா தீநுண்மியின் நிலை மற்றும் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக அனைத்து மாநிலங்களின் முதல்வா்களுடன் திங்கள்கிழமை (ஜன. 11) பிரதமா் மோடி ஆலோசனை நடத்த உள்ளாா்.
பறவைக் காய்ச்சல் தொடா்பாக சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தென்கன்னட மாவட்டத்தில் இறந்த காகங்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அந்த சோதனையில், கா்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இதுவரை கா்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் இல்லை. கேரள மாநிலத்தின் 2 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் காணப்பட்டதைத் தொடா்ந்து, கா்நாடகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.