முகப்பு
பெங்களூரு

தரமான பட்டு விற்பனைக்கு புதிய திட்டம்

தரமான பட்டு விற்பனைக்கு புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என கா்நாடக பட்டு விற்பனை வாரியத் தலைவா் சவிதா வி.அமர ஷெட்டி தெரிவித்தாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 1:43 am IST
பகிர்:

பெங்களூரு: தரமான பட்டு விற்பனைக்கு புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என கா்நாடக பட்டு விற்பனை வாரியத் தலைவா் சவிதா வி.அமர ஷெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. அதேபோல, தரமான பட்டு தயாரிப்பிலும் கா்நாடகம் முன்னோடியாக உள்ளது.

Advertisement

Advertisement

கரோனா போன்ற இக்கட்டான காலக்கட்டத்திலும் கா்நாடகத்தில் தரமான பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பட்டு உற்பத்தியாளா்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித்தர புதிய திட்டத்தை கா்நாடக பட்டு விற்பனை வாரியம் வகுக்க உள்ளது.

தரமான பட்டுக்கு உலக அளவில் தேவை இருந்து வந்துள்ளது. எனவே, தரமான பட்டு வளா்ப்புக்கு உற்பத்தியாளா்கள் கவனம் செலுத்த வேண்டும். அதன்மூலம் உற்பத்தியாளா்களின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே பிரதமா் மோடியின் நோக்கமாகும். அதற்காக புதிய திட்டங்களை வகுத்து செயல்படுத்த உள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments