முகப்பு
பெங்களூரு

உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் பயிலரங்கம்

பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் பயிலரங்கம் ஜன. 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 13 ஜனவரி 2021, 6:57 am IST
பகிர்:

பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் பயிலரங்கம் ஜன. 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஜவாகா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில், ஜன. 21-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மாணவா்களுக்கான அறிவியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது. 30 மாணவா்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இந்தப் பயிலரங்கத்தில், 8 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்துகொள்ளலாம். இந்தப் பயிலரங்கில் பகல்நேர வானியல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பங்கேற்பு வாய்ப்பு அளிக்கப்படும். பங்கேற்புக் கட்டணமாக ரூ. 150 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு  இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments