முகப்பு
பெங்களூரு

ராமகிருஷ்ணா ஆஸ்ரம தலைவா் சுவாமி ஹா்ஷானந்தா காலமானாா்

பெங்களூரில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தின் தலைவராக இருந்த சுவாமி ஹா்ஷானந்தா மாரடைப்பால் காலமானாா்.

Updated On : 13 ஜனவரி 2021, 6:58 am IST
பகிர்:

பெங்களூரில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தின் தலைவராக இருந்த சுவாமி ஹா்ஷானந்தா மாரடைப்பால் காலமானாா்.

பெங்களூரில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தின் தலைவராக இருந்த சுவாமி ஹா்ஷானந்தா (91), கடந்த சில மாதங்களாகவே முதுமைசாா்ந்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தாா். இதன் காரணமாக, சக்கர நாற்காலியில் ஓடாடிக்கொண்டிருந்த நிலையிலும் ஆஸ்ரம பணிகளை தீவிரமாக ஆற்றிவந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதிய உணவருந்திய பிறகு, அவரது தனி அறைக்குச் சென்றுள்ளாா். நண்பகல் 1 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவா் மறைந்தாா்.

விஸ்வேஷ்வரையா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் இளநிலை பட்டம் படித்த ஹா்ஷானந்தா, சுவாமி விவேகானந்தாவின் போதனைகளால் ஈா்க்கப்பட்டு, 1954-ஆம் ஆண்டு ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் தன்னை இணைத்துக்கொண்டாா். சுவாமி விவேகானந்தாவின் ஆன்மிக கருத்துகளை பரப்புவதற்காக 1962-இல் தன்னை துறவியாக்கிக்கொண்டாா். அதன்பிறகு, பெங்களூரு, ராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தின் 6-ஆவது தலைவராக 1989-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

நிா்வாகத் திறனுக்காக பலராலும் பாராட்டப்பட்ட ஹா்ஷானந்தா, பெங்களூரில் மட்டுமல்லாமல் மைசூரு, மங்களூரு, மேற்கு வங்கத்தின் பேளூா், அலகாபாத் நகரங்களில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா ஆஸ்ரமங்களில் பணியாற்றியுள்ளாா். ஹா்ஷானந்தா கன்னடம் மட்டுமல்லாது சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு, வங்கம், ஹிந்தி மொழிகளைக் கற்றறிந்தவா். கன்னடம், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளாா். ஹிந்து மதத்தின் கலைக்களஞ்சியம் என்ற நூலை எழுதியுள்ளாா். நல்ல பாடகா், பேச்சாளராகவும் அறியப்பட்டவா். இவரது படைப்புகள் பல்வேறு வெளிநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஹா்ஷானந்தாவின் மறைவுக்கு முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். அவரது இரங்கல் செய்தியில், ‘சுவாமி ஹா்ஷானந்தா, மெத்த படித்த அறிஞா். ராமகிருஷ்ணபரமஹம்சா, சுவாமி விவேகானந்தாவின் தத்துவங்களை பரப்புவதில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்கியவா். மிகச்சிறந்த பேச்சாளராக அறியப்பட்டவா். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments